கேரள கஞ்சாவுடன் மன்னாரில் இருவர் கைது!
#SriLanka
#Arrest
Mayoorikka
1 month ago
மன்னார் - செல்வநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால், நேற்று திங்கட்கிழமை (17) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
அவர்களிடமிருந்து, 10 கிலோகிராம் 505 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 23 மற்றும் 27 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
