யாழில் சீரற்ற காலநிலையினால் 64 பேர் பாதிப்பு!

#SriLanka
Mayoorikka
7 months ago
யாழில் சீரற்ற காலநிலையினால் 64 பேர் பாதிப்பு!

கன மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் 18 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

 அந்தவகையில், வேலணை பிரதேச செயலர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் பகுதியில் சேதமடைந்துள்ளன. உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த எண்மர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

images/content-image/1763530551.jpg

 சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த எண்மரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எண்மரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

images/content-image/1763530575.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4