போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை - நாடளாவிய ரீதியில் 1,017 பேர் கைது!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையான “ரட்டம எக்கட” திட்டத்தின் கீழ் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 1,017 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 319 கிராம் ஹெராயின், 01.585 கிலோகிராம் ஐஸ், 2.586 கிலோகிராம் ஹஷிஷ் மற்றும் கோகோயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 21 பேருக்கு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போதைக்கு அடிமையானவர்களாக அடையாளம் காணப்பட்ட 29 சந்தேக நபர்களை மறுவாழ்வுக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
