மழையுடன் கூடிய வானிலை அதிகரிக்க வாய்ப்பு - 09 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
மழையுடன் கூடிய வானிலை நாளை முதல் அதிகரிக்கும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் இந்த நிலைமை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.
வலுவான மின்னல் தொடர்பான எச்சரிக்கையையும் வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (23) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 09 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் இன்று அறிவித்துள்ளது.
அத்துடன் மாத்தறை மாவட்டத்தில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 363 பேர் பாதிக்கப்பட்டள்ளதாக மாத்தறை மாவட்ட நிவாரண சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
