சீரற்ற வானிலை - பேரிடர் தொடர்பில் அறிவிக்க அவசர இலக்கம் அறிமுகம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.
குறித்த மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 மாவட்டங்களைச் சேர்ந்த 504 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 04 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அதேநேரம், ஏதேனும் பேரிடர் தொடர்பான அவசரநிலை ஏற்பட்டால் 117 அவசர தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
