புலிகளை கனடா தடை செய்ய வேண்டும் - இலங்கை அரசு கெஞ்சல்

#SriLanka #Canada #Meeting #Ambassador
Prasu
7 months ago
புலிகளை கனடா தடை செய்ய வேண்டும் - இலங்கை அரசு கெஞ்சல்

கனடாவில் விடுதலைப் பு_லிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதை கனடாவின் புதிய தூதுவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். 

புதிதாக இலங்கைக்கு நியமிக்கப்பட்டுள்ள கனடாவின் தூதுவர் இஸபெல் கத்ரின் மார்டின் அவர்களுக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களுக்கும் இடையே ஒரு முக்கியச் சந்திப்பு நடைபெற்றது. 

அமைச்சர் விஜித ஹேரத் விடுத்த கோரிக்கை: இலங்கையில் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் செயல்படக்கூடிய, குறிப்பாக விடுதலைப் பு_லிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரிக்கும் செயல்களைக் கனடாவில் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

கனேடியத் தூதுவரின் உறுதிமொழி

விடுதலைப் புலிகள் அல்லது பிரிவினைவாதச் சித்தாந்தங்களுடன் தொடர்புடைய எந்தவொரு சின்னத்தையும் கனடாக் கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், இலங்கையின் இறையாண்மை (Sovereignty) மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு (Territorial Integrity) கனடா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

விமர்சனம்

கனடாவில் வாழும் சில குழுக்களின் நடவடிக்கைகள், இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிக்குப் பாதகமாக அமைந்துள்ளன என்றும் அமைச்சர் ஹேரத் சுட்டிக்காட்டினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4