நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 200mm மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!
#SriLanka
#weather
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 weeks ago
வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 200 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேற்கு மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு (60-70) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சீரற்றவானிலையில் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
