இரணைமடுக் குளத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கோரிக்கை!

#SriLanka
Mayoorikka
7 months ago
இரணைமடுக் குளத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கோரிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தில் நீர் அதிகமாக வெளியேறுவதால் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதன்காரணமாக குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்து வருகின்றது. 

இதனால இரணைமாடுக் குளத்திற்கு கீழ் உள்ள குடியிருப்புக்களான முரசுமோட்டை, கண்டாவளை, ஓரியன், உமையாள்புரம், தட்டுவன்கட்டி, பன்னங்கண்டி போன்ற கிராமங்களுக்குள் வெள்ள நீர் தொடர்சியாக வருவதனால் இக் கிராமத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

images/content-image/1764426587.jpg

 இந்த வெள்ள நீரைக் கட்டுப்படுத்துவதற்கு ஊர் விவசயிகளும், இராணுவத்தினரும் இணைந்து தடுப்பணைகள் போடுவதில் மும்முரமாக செயற்பாட்டு வருகின்றனர். குறித்த பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

images/content-image/1764426601.jpg

 வெள்ள நிறைக்க கட்டுப்படுத்துவதற்கு உள்ளிட்டோர் பார்வையிட்டு வருகின்றனர். குறித்த பிரதேசத்தை பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நேரில் சென்று பார்வையிட்டு சென்றுள்ளார்.

 இதேவேளை வான்பாயும் இரணைமடுக் குலத்திற்கு பொதுமக்கள் பார்வையிட செல்ல வேண்டாம் எனவும் அங்கு செல்வதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4