லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விசேட அறிவிப்பு!
#SriLanka
Mayoorikka
3 weeks ago
தற்போது சந்தையில் போதுமான எரிவாயு கையிருப்பு இருப்பதாகவும், நிரப்பும் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பகுதிகளில் எரிவாயு விநியோகம் வழமைபோல் நடைபெறுவதாகவும், வீதிச் சிரமங்கள் நிலவும் பகுதிகள் வழமைக்குத் திரும்பியவுடன் அப்பகுதிகளுக்கும் எரிவாயு விநியோகத்தை வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், உங்கள் பிரதேசத்தின் தற்போதைய எரிவாயு விநியோகம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள 1311 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் லிட்ரோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் அறிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
