நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலைக்கு வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பலான சுகன்யா!

#SriLanka
Mayoorikka
7 months ago
நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலைக்கு வந்தடைந்த இந்திய கடற்படைக் கப்பலான சுகன்யா!

இலங்கைக்கான மேலதிக மனிதாபிமான உதவிகளுடன் இந்திய கடற்படைக் கப்பல் INS சுகன்யா திருகோணமலைக்கு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 

 இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தமது எக்ஸ் கணக்கில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

 ஏற்கனவே இந்திய அரசாங்கத்தின் சார்பாக, இந்திய கடற்படைக் கப்பல்களான INS விக்ராந்த் மற்றும் INS உதயகிரி ஆகியவை கடந்த 28 ஆம் திகதி நிவாரணப் பொருட்களுடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. 

 அத்துடன் இந்திய மீட்பு பணியாளர்களும் இலங்கையில் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இலங்கையைப் புரட்டிப் போட்ட டிட்வா புயலால் எழுந்த பாதிப்புக்கள் ஏராளம். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு முதல் நிவாரண உதவியாக இந்திய அரசு கைகொடுத்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4