வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளை ஒருங்கிணைப்பு செய்ய குழு நியமனம்!

#SriLanka
Mayoorikka
7 months ago
வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளை  ஒருங்கிணைப்பு செய்ய குழு நியமனம்!

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்ததை தொடர்ந்து இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பு, ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்காக உயர் மட்ட தேசியக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 வெளிநாடுகள், ஐ.நா. நிறுவனங்கள், சர்வதேச அரச சாரா நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் பரோபகாரர்களிடமிருந்து பெறப்படும் பொருட்கள் முறையாகவும் சரியான நேரத்திலும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் வழங்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். 

 பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தலைமையில் இக்குழு இயங்குவதுடன் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தில் (NDRSC) நிறுவப்பட்ட விசேட செயலகம் மூலம் செயற்படும்.

 அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்ததை தொடர்ந்து இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு மனிதாபிமான நிவாரண உதவிகளின் ஒருங்கிணைப்பு, ஒதுக்கீடு மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்காக உயர் மட்ட தேசியக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 வெளிநாடுகள், ஐ.நா. நிறுவனங்கள், சர்வதேச அரச சாரா நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் பரோபகாரர்களிடமிருந்து பெறப்படும் பொருட்கள் முறையாகவும் சரியான நேரத்திலும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் வழங்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். 

 பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தலைமையில் இக்குழு இயங்குவதுடன் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையத்தில் (NDRSC) நிறுவப்பட்ட விசேட செயலகம் மூலம் செயற்படும்.

 கிராம அலுவலர் (GN), பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த தரவுத்தளம், எங்கு, எப்படி பொருட்கள் அனுப்பப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான அடிப்படையை தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. அத்துடன் இந்தக் குழு, தாமதங்களைக் குறைத்து, இடைவெளிகளை நிவர்த்தி செய்து, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு உதவிகள் கிடைப்பதற்கு முன்னுரிமை கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்யும்.

 கிராம அலுவலர் (GN), பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த தரவுத்தளம், எங்கு, எப்படி பொருட்கள் அனுப்பப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான அடிப்படையை தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. அத்துடன் இந்தக் குழு, தாமதங்களைக் குறைத்து, இடைவெளிகளை நிவர்த்தி செய்து, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு உதவிகள் கிடைப்பதற்கு முன்னுரிமை கவனம் செலுத்தப்படுவதை உறுதி செய்யும்.

 வெளிநாட்டு உதவிகள் கண்காணிப்பு அமைப்பை (Foreign Aid Tracking System) நிர்வகிப்பது இக்குழுவின் முக்கிய பொறுப்பாகும். 

இது பெறப்பட்ட, சேமிக்கப்பட்ட, விநியோகிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தொடர்பில் கண்காணிப்பை மேற்கொள்ளும். இதற்கு அனைத்து தொடர்புடைய அமைச்சுகள், மாகாண நிர்வாக அலகுகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் சரியான நேரத்தில் அறிக்கைகளை வழங்க வேண்டப்படுவதுடன், சமீபத்திய சரிபார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய தரவுகளை இவ்வமைப்பில் ஊட்டவேண்டும். 

 தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, தேவையான தகவல்களைப் பெறவும், அதிகாரிகளை அழைக்கவும், அறிக்கைகளைக் கோரவும், நிபுணர்களைக் கலந்தாலோசிக்கவும், அவசர காலங்களின்போது இடைக்கால உத்தரவுகளை வழங்கவும் இக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4