கொத்மலை நீர்த்தேக்கத்தில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
7 months ago
கொத்மலை நீர்த்தேக்கத்தில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை!

கொத்மலை நீர்த்தேக்கத்தில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்  எச்.எம்.ஜே. ஹேரத் தெரிவித்துள்ளார். 

நேற்று (09) பிற்பகல் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கேட்போர் கூடத்தில் கொத்மலை நீர்த்தேக்க அணையை ஆய்வு செய்த பின்னர் ஊடகங்களுக்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பது தொடர்பாக இந்த நாட்களில் பரவி வரும் வதந்திகள் பொய்யானவை என்றும், கொத்மலை நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் அறிவியல் தரவுகளின் அடிப்படையில் நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளைத் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையில், மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான 55 ஹெக்டேர் நிலத்தில் இடம்பெயர்ந்த மக்களை குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4