கிளிநொச்சியில் அழிவடைந்த கால்நடைகள் - மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
7 months ago
கிளிநொச்சியில் அழிவடைந்த கால்நடைகள் - மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற டித்வா புயல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடைகள் அழிந்துள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய அரசாங்கம் டித்வா புயல்காரணமாக பாதிக்கப்பட்ட கால்நடைகளின் விவரங்களை தமது பகுதிகளில் உள்ள கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தினால் பதிவினை மேற்கொண்டு வருகின்றனர். 

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடை பண்ணையாளர்கள் தமது பதிவினை மேற்கொண்டிருந்தனர். 

 குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்கள் கூறுகையில், தற்பொழுது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக தமது வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டு வந்த ஆடு, மாடு, கோழி என்பன முற்றும் முழுதாக அழிவு வடைந்தும் தற்பொழுது நோய்வாயினால் பாதிக்கப்பட்டுள்ளது. 

 இதன் காரணமாக தமது வாழ்வாதாரம் முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  அரசாங்கம் எமக்கான நஷ்டஈட்டினை வழங்கினால் மீண்டும் எமது வாழ்வாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வகையில் அமையும் என தெரிவித்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4