பாபா வங்காவின் கணிப்பு சரியா? உலகளவில் அடுத்தடுத்து நடக்கும் அனர்த்தங்கள்
சமீப காலமாக உலக நாடுகளை உலுக்கிய இயற்கை அழிவுகள் அதிகரித்து வருகிறது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மண்சரிவு, புயல், வெள்ளம் ஆகிய அனர்த்தங்கள் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம், உடை, உணவு ஆகியவற்றில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்த வரிசையில், அறிவுபூர்வமான மக்கள் அதிகம் வாழும் ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா உலகில் அடுத்தடுத்து நடக்கப்போகும் பேரழிவுகள் குறித்து அவருடைய கணிப்பில் கூறிச் சென்றுள்ளார். அவர் கூறியது போன்று அனர்த்தங்களும் நடைபெற்றுக் கொண்டிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரின் கணப்பின்படி, மிகப் பெரிய ஆழிப்பேரலை அலையொன்று மக்களைத் தாக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், கடந்த 1999 ஆம் ஆண்டு பாபா வங்கா எழுதிய நூலில் ஏகப்பட்ட அழிவுகள் குறித்து கூறப்பட்டது.
எடுத்துக் காட்டாக, ஒரு கொடிய நோய் மக்களைத் தாக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2020 ஆம் ஆண்டில் கொவிட்-19 என்னும் மர்மமான வைரஸ் ஒன்று மில்லியன் கணக்கான மக்களின் உயிரைப் பறித்தது.
எனினும், பாபா வங்கா கணிப்பில் கூறப்பட்டது போன்று இதுவரையில் பெரியளவில் பாதிப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
