குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி மீது விசாரணை!

#SriLanka #Police #Investigation #Attack #Lanka4
Mayoorikka
6 months ago
குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி மீது விசாரணை!

நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து குளியாப்பிட்டிய பொலிஸ் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விசாரணையின் முடிவு வரும் வரை, குறித்த அதிகாரி மாவதகம பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 வடமேற்கு மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் ஒரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரினால் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தாக்குதல் அண்மையில் நடந்ததை பொலிஸார் உறுதிப்படுத்தினர், இருப்பினும் சரியான திகதி வெளியிடப்படவில்லை. 

 இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இது உடனடி நிர்வாக நடவடிக்கைக்கு வழிவகுத்தது. விசாரணையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4