25000 ரூபாய் உதவித் தொகை - 69.56 சதவீதமானோருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
#SriLanka
#money
#Aid
Thamilini
3 hours ago
தித்வா சூறாவளிக்குப் பிறகு குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கும் அவர்களின் வீடுகளை மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் வழங்கிய ரூ.25,000 உதவித்தொகை பாதிக்கப்பட்ட மக்களில் 69.56% பேருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவை மையத்தின் உதவிச் செயலாளர் ஜெயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்தார்.
அதன்படி, தகுதியான 642,375 வீடுகளில், 469,457 வீடுகள் கணக்கிடப்பட்டு, அவற்றில் 299,513 வீடுகளுக்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், நேற்று காலை நிலவரப்படி, 169,944 வீடுகளுக்கு பணம் செலுத்த வேண்டியிருந்தது, இதற்காக அரசாங்கம் 7,487 பில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
