கைது செய்யப்பட்ட அர்ச்சுனா பிணையில் விடுதலை!

#SriLanka #Court Order
Mayoorikka
6 months ago
கைது செய்யப்பட்ட அர்ச்சுனா பிணையில் விடுதலை!

பிடியாணை பிறப்பித்து கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 கோட்டை காவல்நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் அர்ச்சுனா மீது வழக்குத் தொடரப்பட்டது. 

 ஏற்கனவே இந்த வழக்கில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்றைய வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை. இதனால் அவர் இன்று(24) கைது செய்யப்பட்டார். 

 குறித்த வழக்கு தொடர்பில் அர்ச்சுனா கோட்டை நீதிமன்றில் முன்னிலையாகிருந்த நிலையில் நீதவான் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4