ஜப்பானின் சட்டங்களை மீறிய இலங்கை பிரஜை கைது!
#SriLanka
#Crime
#Law
#Japan
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஷினகாவா நிலையம் அருகே, ஜப்பானின் துப்பாக்கி மற்றும் வாள் கட்டுப்பாட்டு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றபோது இலங்கையர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்த பொலிஸ் அதிகாரி அவரைத் தடுத்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சுமார் பத்து பொலிஸ் அதிகாரிகள் குழு நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கை மற்றும் கழுத்தில் காயங்களுடன் மயக்கமடைந்த இலங்கையர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் துப்பாக்கி மற்றும் வாள் கட்டுப்பாட்டு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(வீடியோ இங்கே )
அனுசரணை
