248 வருடங்களுக்கு பின் 3 ராசிக்காரர்களுக்கு வரும் யோகம்
நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார்.
இந்நிலையில் டிசம்பர் 26ம் திகதி சுக்கிரன் ப்ளூட்டோவுடன் சேர்ந்து 3 ராசிக்காரர்களுக்கு த்வி துவாதஷ் யோகத்தை உருவாக்கவுள்ளார்.
கும்பம்
த்வி துவாதஷ் யோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
மீனம்
த்வி துவாதஷ் யோகத்தால் மீன ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறும் வாய்ப்புள்ளது.
முக்கியமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். பல துறைகளில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.
வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்ற கனவு நனவாகும். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, தம்பதிகளிடையே அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் த்வி துவாதஷ் யோகத்தால் நல்ல வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். கையில் எடுக்கும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
(வீடியோ இங்கே )