பாரிஸில் 32 பாதிரியார்களை ஏமாற்றி பண மோசடி செய்த நபர் கைது
#Arrest
#France
#money
#Fraud
#priests
Prasu
2 months ago
பாரிஸில் உள்ள 32 பாதிரியார்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பண மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வுபெற்ற பாதிரியார்களுக்கு தொடர்ச்சியாக தொலைபேசியில் அழைத்து, கடிதங்கள் அனுப்பி அவர்களிடம் இருந்து பணத்தினை பெற்றுள்ளார்.
தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு இந்த பணத்தை சேகரிப்பதாகவும் ஏராளமான குழந்தைகளை தாம் பராமரிப்பதாகவும் பொய்யான ஆவணங்களை காண்பித்து இந்த பணத்தினை வசூலித்துள்ளார்.
குறித்த நபர் மொத்தமாக €230,000 யூரோக்கள் வசூலித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )