கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - அர்ச்சுனா குற்றச்சாட்டு!
#SriLanka
#doctor
#Archuna
Thamilini
1 month ago
வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனவரி 3 ஆம் திகதி பௌத்த விகாரையை தாக்கி கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுன இன்று தெரிவித்தார்.
“கோயிலைத் தாக்கி வகுப்புவாத வன்முறையைத் தூண்டுவதே அவர்களின்திட்டம்” என்று அவர் கூறினார்.
வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் மனதை மூளைச்சலவை செய்து பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.