தையிட்டி விகாரை காணி பொதுமக்களிடம் கையளிக்க வேண்டும்: நாகவிகாரை விகாராதிபதி
#SriLanka
#Thaiyiddi
Mayoorikka
3 hours ago
தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் ஜனாதிபதி உட்பட அனைவருக்கும் நான் ஏற்கனவே தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களின் காணி என்பதனால் அதனை உரித்துடைய பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென கூறியுள்ளதாக தெரிவித்த தேரர், இன்று மீண்டும் அதனை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.