வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொலை
#Hindu
#Arrest
#Murder
#GunShoot
#Bangladesh
Prasu
2 hours ago
வங்கதேசத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் அதிகரித்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி, இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் மற்றும் அம்ரித் மண்டல் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் ஆடை தொழிற்சாலை காவலாளியான பிஜேந்திர பிஸ்வாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரை சுட்டுக் கொன்றவர் சக ஊழியர் நோமன் மியா என அடையாளம் காணப்பட்டதுடன், அவரிடம் இருந்து சிறிய ரக துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )