பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - ஆதரவு கரம் நீட்டிய நாமல்!
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் கல்வி கட்டமைப்பு சீர்குலைய இடமளிக்க முடியாது. நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சு நடத்தப்படும் எனவும் கூறினார்.
அதேவேளை, குறுகிய அரசியல் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுங்கட்சி அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”