இலங்கையில் பாலியல் வன்முறை தொடர்பான குற்றங்கள் கவனிக்கப்படுவதில்லை - ஐ.நா!
#SriLanka
#UN
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
இலங்கையில் மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் உள்ளதாக ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே நீண்டகாலமாக நீதி மறுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் - நீதிக்கான நம்பிக்கையை கூட” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டு பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கும், மாற்றத்தக்க சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசாங்கம் தனது உறுதிப்பாட்டை அவசரமாகப் பின்பற்ற வேண்டும் என்று குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்