அரச உத்தியோகத்தர்களுக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி!
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் தனது நிர்வாகம் ஒருபோதும் அரசியல் பாதுகாப்பை வழங்காது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசுத் துறைகளில் உள்ள சில திறமையற்ற அதிகாரிகளுக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கும் இடையிலான தொடர்புகள் தெரியவந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தகைய அதிகாரிகள் இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுடனான தங்கள் உறவுகளை உடனடியாகத் துண்டித்துக் கொள்ள வேண்டும் அல்லது அவர்களின் உத்தியோகபூர்வ பதவிகள் மற்றும் கடமைகளில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்