அரசியல் அல்லது தனிப்பட்ட காரணிகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படக்கூடாது - பிரதமர் வலியுறுத்து!

#SriLanka #ADDA #Harini Amarasooriya #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 months ago
அரசியல் அல்லது தனிப்பட்ட காரணிகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படக்கூடாது - பிரதமர் வலியுறுத்து!

அரசியல் அல்லது தனிப்பட்ட காரணிகளின் அடிப்படையில் அல்லாமல், அனைத்து குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவும் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர்  ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

புத்தளம் சாஹிரா முஸ்லிம் கல்லூரியில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ​"கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளின் விளைவுகளை நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். 

ஆனால் இப்போது நமக்கு நல்ல நிகழ்காலம் உள்ளது. எனவே, இனிமேல், அரசியல் அல்லது தனிப்பட்ட காரணிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்து, ஒட்டுமொத்த குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக முடிவுகளை எடுக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4