தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறைத்தண்டனை
நடிகர் தனுஷ் அவரது மகன்களுடன் நேற்று இரவு திருப்பதி மலைக்கு சென்றுள்ளார். அதிகாலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் அவர் தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்து தனுஷ் கோவிலில் இருந்து வெளியே வந்த போது அவரை காண பக்தர்கள் முண்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.
மேலும் சிலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். தனது மகன்களுடன் வந்த தனுஷ் அங்கிருந்தவர்களை பார்த்து கைகூப்பி வணங்கியபடி சென்றார்.
தென் கொரிய நீதிமன்றம் முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீக்கு ஊழல் குற்றச்சாட்டில் 20 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2022 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில், Unification Church என்ற அமைப்பிடமிருந்து வைர நெக்லஸ் மற்றும் விலையுயர்ந்த ஹேண்ட் பேக்குகள் உட்பட சுமார் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை அவர் லஞ்சமாகப் பெற்றதாக வழக்கு நடந்து வந்தது.
இந்நிலையில், கிம் தனது பதவியைத் தனிப்பட்ட லாபத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி 20 மாத சிறை தண்டனை விதித்தார்.
மேலும், 12.85 மில்லியன் டாலர் பணத்தைத் திருப்பிச் செலுத்தவும், வைர நெக்லசை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.
(வீடியோ இங்கே )