பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பு - தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு
#Death
#Pakistan
#BombBlast
#Terrorists
Prasu
3 hours ago
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கதீஜா துல் குப்ரா மசூதியில் நேற்று மக்கள் அதிகம் கூடியிருந்த சமயம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
சந்தேக நபர் ஒருவர் மசூதி வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 170க்கும் அதிகமானோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
(வீடியோ இங்கே )