கனடாவில் உயர்நிலை பாடசாலையில் துப்பாக்கிச்சூடு - 10 பேர் பலி!
#SriLanka
#Canada
#GunShoot
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள மேல்நிலை பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர்.
அங்குள்ள உயர்நிலை பாடசாலையில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், அங்கிருந்து 06 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அத்துடன் தாக்குதல்தாரியும் இதில் உயிரிழந்துள்ளார். காயமடைந்த 25 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்