பிரான்சில் 36 நாட்களாக தொடரும் கனமழை - லட்சக்கணக்கானோர் பாதிப்பு

#France #Warning #Flood #HeavyRain
Prasu
3 months ago
பிரான்சில் 36 நாட்களாக தொடரும் கனமழை - லட்சக்கணக்கானோர் பாதிப்பு

பிரான்சில் வரலாறு காணாத அளவுக்கு 36 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெட்ரோ என பெயரிடப்பட்ட புயலால் இந்த கனமழை பெய்து வருகிறது.

மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

கார்கள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், வீடுகள், குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் தேங்கியும் காணப்படுகிறது.

1959ம் ஆண்டுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் பதிவான அதிகபட்ச மழை இதுவென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. 

இதனை தொடர்ந்து 4 மாகாணங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4