பிரான்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க அவசரமாக கூடும் ஐ. நா பாதுகாப்பு கவுன்சில்
அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் முன்னெடுத்தது. இதில் போர் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு வெளியுறவு மந்திரி ஜீன்-நோயல் பேரட் வெளியிட்ட செய்தியில், பிரான்ஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரகால கூட்டம் ஒன்று கூடி ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமையை பற்றி பேச உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )