மத்திய கிழக்கு பதற்றம் – பிரான்சில் அவசர அமைச்சர் கூட்டம்

#France #Meeting #Minister #War #Middle East #L4
Prasu
1 hour ago
மத்திய கிழக்கு பதற்றம் – பிரான்சில் அவசர அமைச்சர் கூட்டம்

மத்திய கிழக்கில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் போர்நிலையை முன்னிட்டு, பிரதமர் செபாஸ்டியன் லெகார்னு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளார்.

இந்த கூட்டத்தில் அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அங்கு பணியில் இருக்கும் பிரெஞ்சு இராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி பாபின் மண்டோன் உள்ளிட்ட பல உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டு நிலைமையை விளக்க உள்ளனர்.

ரகசிய தகவல்கள் பகிரப்படவுள்ளதால், கூட்டத்தில் பங்கேற்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்ட அறைக்குள் செல்லும் முன் தங்களது கைபேசிகளை வெளியே ஒப்படைக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்துறை அமைச்சர், வெளிநாட்டு விவகார அமைச்சர் மற்றும் பொருளாதார அமைச்சர் உள்ளிட்ட பல அமைச்சர்களும் இந்த ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.

மத்திய கிழக்கு போரின் தாக்கத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளதால், எரிபொருள் விலைகள் தொடர்பான பிரச்சினையும் இந்த கூட்டத்தில் பேசப்படலாம் என கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!