லெபனானில் இருந்து பாதுகாப்பாக நாடு திரும்பிய 177 இந்தியர்கள்
#War
#Rescue
#Indian
#Lebanon
#Middle East
#L4
Prasu
2 hours ago
மத்திய கிழக்கில் போர் காரணமாக விமான போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. விமான போக்குவரத்து பாதிப்பால் இந்தியர்கள் உள்பட பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், முதல் கட்டமாக சுமார் 177 இந்தியர்கள் லெபனானில் இருந்து டெல்லிக்கு பாதுகாப்பாக திரும்பி உள்ளனர் என பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், கத்தாரில் சுமார் 500க்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )