எரிபொருளை பதுக்கிய மூவர் அதிரடி கைது!

#SriLanka #Arrest #Police #Fuel #ImportantNews #Public #L4
Lakhi
3 months ago
எரிபொருளை பதுக்கிய மூவர் அதிரடி கைது!

நிலவும் நிலையில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பயன்படுத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சட்டவிரோதமான முறையில் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் போக்குவரத்து செய்தமை தொடர்பில் மூன்று வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 நேற்று (20) மாலை ஹங்வெல்ல, களுத்துறை வடக்கு மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய காவல்துறை பிரிவுகளில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹங்வெல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட எமுல்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அனுமதிப்பத்திரமின்றி 645 லீற்றர் டீசலை வைத்திருந்த 31 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை வடக்கு காவல்துறை பிரிவின் போசிரிபுர பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில், அனுமதிப்பத்திரமின்றி 35 லீற்றர் 500 மில்லி லீற்றர் பெட்ரோலை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். Advertisement கொட்டாஞ்சேனை காவல்துறை பிரிவின் புளுமெண்டல் பகுதியில் லொறி ஒன்றின் மூலம் அனுமதிப்பத்திரமின்றி 2000 லீற்றர் (10 பீப்பாய்கள்) டீசலைக் கடத்திச் சென்ற 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்தந்த காவல் நிலையங்கள் மேற்கொண்டு வருகின்ற மை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4