சத்தீஸ்கர் மின் உற்பத்தி நிலைய வெடிவிபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு
#India
#Death
#Lanka4
#Factory
#Blast
#Power_Plant
Prasu
3 hours ago
சத்தீஸ்கரின் சக்தி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜார்க்கண்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், விபத்தில் காயமடைந்த ஆறு நாட்களுக்குப் பிறகு, இன்று ராய்கர் மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்தார்.
மேலும் சுமார் பன்னிரண்டு பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை சிகிச்சையின் போது இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் ராய்கர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்ரதா குமார் ஜனா என்றும் மற்றொருவர் ராய்ப்பூரில் உள்ள கல்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உபேந்திர சா என்றும் அடையாளம் காணப்பட்டனர்.
(வீடியோ இங்கே )