கனடாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக தடை விதிக்க கோரிக்கை
கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்றிணைந்து 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மனு அளித்துள்ளனர்.
'ஏஜ் ஸ்டாண்டர்ட்' (Age Standard) என்ற பெயரில் இயங்கும் இந்த அமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் துணிகர மூலதனத் துறைகளைச் சேர்ந்த ஏழு முக்கிய நபர்களால் வழிநடத்தப்படுகிறது.
இந்தத் தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், அவை ஏன் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வருவதில்லை என்பதையும் நாங்கள் அறிவோம்.
எங்கள் குழந்தைகள் வளர்ந்து வரும் சூழலை ஆய்வு செய்த பிறகே இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறோம் என இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜீன்-செபாஸ்டியன் ஜிரோக்ஸ் தெரிவித்துள்ளார்.
16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க வலுவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பின்பற்றப்படுவதைப் போல, மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலம் பயனர்களின் வயதைக் கணிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )