கனடாவில் அதிகரிக்கும் மருத்துவர்களின் பாலியல் அத்துமீறல்கள்
கனேடிய மருத்துவத் துறையில் பணியாற்றும் மருத்துவர்களால் இழைக்கப்படும் பாலியல் அத்துமீறல்களில் பெரும்பாலானவை வெளிச்சத்திற்கு வராமல் மூடிமறைக்கப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
கனடிய மருத்துவ சங்க இதழின் ஆய்வறிக்கையின்படி, மருத்துவர்கள் மீதான பாலியல் புகார்களில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை பொதுவெளியில் அறிவிக்கப்படுவதில்லை என தெரியவந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவான 1,400க்கும் மேற்பட்ட தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மருத்துவர்களால் பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதத்தினர் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆவர்.
இவ்வளவு தீவிரமான புகார்கள் இருந்தபோதிலும், வெறும் 34 சதவீத வழக்குகள் மட்டுமே பொலிஸாரிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பல கனேடிய மருத்துவர்கள் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தங்களது ஒழுங்குமுறை வாரியங்களிடம் மறைப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )