Project Freedom" திட்டம் - ட்ரம்ப் கூறுவது என்ன?
ஈரானுடன் அமெரிக்கா மிகவும் சாதகமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக அமெரிக்கப் படைகளை அனுப்பும் திட்டத்தை அறிவித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"புராஜெக்ட் ஃப்ரீடம்" என்று அழைக்கப்படும் இந்த புதிய கடற்படை நடவடிக்கை, முற்றுகையால் சிக்கித் தவித்து, உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் கப்பல் பணியாளர்களுக்கான ஒரு மனிதாபிமானத் தலையீடாகும்.
இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "கப்பல்களையும் பணியாளர்களையும் ஜலசந்தியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.
கப்பல் போக்குவரத்திற்கு இப்பகுதி பாதுகாப்பானதாக மாறும் வரை அவர்கள் திரும்ப மாட்டார்கள் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )