இதுதான் அரசியல் நாகரீகம் - யாரும் செய்யாததை செய்த விஜய்!
தமிழகத்தின் 18 ஆவது முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் இன்றைய தினம் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
விஜயின் இந்த செயலை பல அரசியல் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.
ஏறக்குறைய 59 வருடங்களுக்கு பிறகு இப்படியொரு சம்பவம் இடம்பெறுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
1967 தேர்தலில் அண்ணா தலைமையிலான தி.மு.க. வெற்றி பெற்றது. அறிஞர் அண்ணா முதல்வராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் காமராஜர் தோற்கடிக்கப்பட்டார்.
அண்ணா முதல்வராக பதவி ஏற்றதும், காமராஜர் உள்ளிட்ட மூத்த தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதன்பிறகு வெற்றிப் பெற்ற எந்த முதலமைச்சரும் அரசியல் தலைவர்களை சந்திக்கவில்லை.
இந்நிலையில் ஏறக்குறைய 59 வருடங்களின் பின் இப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது. பெரும்பாலானோர் விஜயின் இந்த செயலை அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம் என பாராட்டி வருகின்றனர்.
(வீடியோ இங்கே )