130 குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சிக்கிய ஜெர்மன் மருத்துவர்
ஜெர்மனியில் குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் மீது, குழந்தைகளைக் குறிவைத்து 130 கற்பழிப்பு மற்றும் பிற பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லினுக்கு அருகிலுள்ள பிராண்டன்பர்க் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்த, அந்த சந்தேக நபர், 12 ஆண்டுகளில் இந்தக் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், எத்தனை குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர் என்பது உறுதி செய்யப்படவில்லை.
ஹேவெல்லாண்ட் கிளினிகன் என்ற சுகாதார சேவை நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் மீது 130 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தக் குற்றங்கள் டிசம்பர் 1, 2013 மற்றும் கடந்த ஆண்டு நவம்பர் 5ம் திகதிகளுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.
பிராண்டன்பர்க்கில் உள்ள ரத்தேனோவ் மற்றும் நௌன் ஆகிய இரண்டு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில், "குற்றம் சாட்டப்பட்டவர் தனது தொழில்முறை கடமைகளை ஆற்றும் போது அதிக எண்ணிக்கையிலான குற்றங்களைச் செய்ததாக நம்பப்படுகிறது.
(வீடியோ இங்கே )