மத்தியப் பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் மரணம்
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த மேலும் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
தேவாஸ் கூடுதல் மாவட்ட ஆட்சியர் (ADM) சஞ்சீவ் ஜெயின் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "தேவாஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது" என்றார்.
டோங்க் கலான் பகுதியில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையின் உரிமம் பெற்ற உரிமையாளரான அனில் மால்வியா, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கடுமையான பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்தில் காயமடைந்த மூன்று தொழிலாளர்கள் இந்தூரில் உள்ள அரசு மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )