ஜெருசலேமில் தனது முதல் தூதரகத்தை திறக்க உள்ள சோமாலிலாந்து
சோமாலிலாந்து ஜெருசலேமில் ஒரு தூதரகத்தைத் திறக்கும் என்று இஸ்ரேலுக்கான சோமாலியாவின் பிரிந்து சென்ற பிராந்தியத்தின் தூதர் முகமது ஹாகி தெரிவித்துள்ளார்.
சோமாலிலாந்தின் சுதந்திரத்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"நமது இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான வளர்ந்து வரும் நட்பு, பரஸ்பர மரியாதை மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை" பிரதிபலிக்கிறது என்று ஹாகி குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிடியான் ஸார் இந்த அறிவிப்பை வரவேற்று, இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு "முக்கியமான படி" என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், 30 ஆண்டுகளுக்கும் மேலான தூதரகத் தனிமைப்படுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சோமாலிலாந்தை அங்கீகரித்த உலகின் முதல் நாடாக இஸ்ரேல் ஆனது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )