அம்பாறைக்கு நாளை ஜனாதிபதி அநுரகுமார விஜயம்!

#SriLanka #Ampara #Lanka4 #President #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
அம்பாறைக்கு நாளை ஜனாதிபதி அநுரகுமார விஜயம்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை (வெள்ளிக்கிழமை) அம்பாறை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளதுடன் முக்கிய நிர்வாகக் கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயம் நாளை காலை நிந்தவூர் பகுதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. காலை 09.30 மணியளவில் நிந்தவூர் பிரதேச சபை காரியாலயத்திற்கு அருகில் அமையவுள்ள நிந்தவூர் கலாசார மையத்திற்கான" அடிக்கல்லை அவர் நாட்டி வைக்கவுள்ளார். 

இதனைத் தொடர்ந்து, முற்பகல்11.30 மணியளவில் அம்பாறை நகர மண்டப வளாகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வணிக வளாகத்திற்கான பணிகளை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

பிற்பகல் 02.00 மணியளவில், அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி தலைமை தாங்கவுள்ளார். இதன்போது மாவட்டத்தின் தற்போதைய தேவைகள், முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வுகளில் அம்பாறை மாவட்ட பிரதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர். 

அத்துடன் பாதுகாப்பு தொடர்பான முன்னேற்பாடுகளைக் கவனிக்கும் வகையில் முப்படைகளின் உயர் அதிகாரிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

ஜனாதிபதியின் இந்த விஜயம் அம்பாறை மாவட்டத்தின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்துவதிலும் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4