மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுரகுமாரவை நேரில் சந்தித்துப் பேசினார் அம்பிட்டிய சுமனரதன தேரர்!

#SriLanka #Batticaloa #Lanka4 #President #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுரகுமாரவை நேரில் சந்தித்துப் பேசினார் அம்பிட்டிய சுமனரதன தேரர்!

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத் தேரர், ஜனாதிபதி அவர்களின் மட்டக்களப்பு விஜயத்தின் போது நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதிக்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக தேரர் தெரிவித்துள்ளார். அதேவேளை, தான் இதுவரை பின்பற்றி வந்ததாக கூறப்படும் “ராஜபக்ஷ நிகாய” அரசியல் சார்பு அமைப்பிலிருந்து விலகுவதாகவும் அம்பிட்டிய தேரர் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு மற்றும் அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த மாற்றம் முக்கியமான அரசியல் நகர்வாக பார்க்கப்படுகின்றது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4