சம்பள வேறுபாடு - தொடர் போராட்டத்தில் இறங்கிய சாலை அபிவிருத்தி அதிகாரசபை பொறியாளர்கள் சங்கம்!
சாலை அபிவிருத்தி அதிகாரசபை பொறியாளர்கள் சங்கம் இன்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளது.
சம்பள வேறுபாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சாலை அபிவிருத்தி அதிகாரசபை பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் உமேஷ் நலுபால, சாலை அபிவிருத்தி அதிகாரசபை பொறியாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் அல்லது மண்டல ஒருங்கிணைப்புக் குழுக்கள் என, அதிகாரசபைக்கு வெளியே உள்ள பல குழுக்களில் பங்கேற்கின்றனர்.
இவற்றிலிருந்தும், சாலை அபிவிருத்தி அதிகாரசபையுடன் நேரடியாகத் தொடர்பில்லாத, சாலை அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தால் ஒதுக்கப்படாத, ஆனால் தேசியத் தேவையாகக் கருதப்படும் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் விலக நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இதன் விளைவாக, திட்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் எங்களின் பங்களிப்பு இல்லாததால் நாங்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இதற்கு ஒரு தீர்வு காணப்படாவிட்டால், இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுப்போம்." என்றார்.
(வீடியோ இங்கே )