"மக்களைத் திசைதிருப்பவே பொய் பிரசாரம்" - எல்.சி சர்ச்சை குறித்து பிரதி அமைச்சர் அனில் ஜயந்த காரசாரம்!

#SriLanka #Minister #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
"மக்களைத் திசைதிருப்பவே பொய் பிரசாரம்" - எல்.சி சர்ச்சை குறித்து பிரதி அமைச்சர் அனில் ஜயந்த காரசாரம்!

வாகன இறக்குமதி மீதான மேலதிக வரி (Surcharge) விதிக்கப்படுவதற்கு முதல் நாள், 4,000 வாகனங்களுக்காகக் கடன் கடிதங்கள் (Letters of Credit - LC) திறக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது என பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

"4,000 வாகனங்களுக்குக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யான தகவலாகும். எதிர்க்கட்சிகள் குறிப்பிடும் புள்ளிவிவரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை மற்றும் மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கம் கொண்டவை" என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உண்மையில், கடந்த மே 15ஆம் திகதி 380 கடன் கடிதங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 23.71 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 1,782 வாகனங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார்.

"நாட்டில் ஏதோ ஒரு பாரிய பிரச்சனை இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி, பொதுமக்களைத் திசைதிருப்பவே இவ்வாறான பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. 

இத்தகைய ஆதாரமற்ற செய்திகளை நம்பி, பொதுமக்கள் தேவையற்ற கொள்வனவுகளில் ஈடுபட்டு நஷ்டமடைய வேண்டாம். சமூக ஊடகங்களில் பகிரப்படும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை மக்கள் நம்பவேண்டாம்."

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!