பிரான்சில் அரிய ரஷ்ய புத்தகங்களைத் திருடிய ஆறு ஜார்ஜியர்களுக்கு சிறைத்தண்டனை
பிரான்சின் மதிப்புமிக்க நூலகங்களிலிருந்து, 19ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற அலெக்சாண்டர் புஷ்கின் உள்ளிட்ட ரஷ்ய இலக்கியப் படைப்புகளின் அரிய பதிப்புகளைத் திருடியதற்காக ஆறு ஜார்ஜியர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா முழுவதும் உள்ள நூலகங்களில் சமீப ஆண்டுகளில் தொடர்ச்சியாக நடந்த இதேபோன்ற கொள்ளைச் சம்பவங்களுக்கு நீதி கோரும் சமீபத்திய வழக்கு இதுவாகும்.
ரஷ்யாவுடன் தொடர்புள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பின் வேலையாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
19ம் நூற்றாண்டின் இலக்கிய மேதைகளான புஷ்கின், நிக்கோலாய் கோகோல் மற்றும் மிகைல் லெர்மொண்டோவ் உள்ளிட்ட பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள அரிய ரஷ்யப் படைப்புகளைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே