பாகிஸ்தானில் பயிற்சி மையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் மரணம்

#Death #Student #Pakistan #Lanka4 #Building #collapse #L4
Prasu
3 hours ago
பாகிஸ்தானில் பயிற்சி மையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் மரணம்

பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியிலுள்ள லாகூர் நகரில் ஒரு பயிற்சி மையத்தின் கூரை இடிந்து விழுந்ததில், 14 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

"பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகருக்குத் தெற்கே உள்ள கஹ்னா நௌ, பஸ்தி ஈத்கா பகுதியில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் உயிரிழந்தனர், மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்," என்று எடி ஆம்புலன்ஸ் சேவை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

நகரின் உயர்மட்ட சிவிலியன் அதிகாரியான ஆணையர் மரியம் கான், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிசெய்ததுடன், ஒரு ஆசிரியரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த நிலையில், இந்த பேரழிவு தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4