தென்மேற்கு பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 40 பேர் மரணம்
தென்மேற்கு பாகிஸ்தானில் அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையிலிருந்து பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்தனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களின் எல்லைக்கு அருகிலுள்ள தொலைதூரப் பகுதியான டானா சாரில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக பலுசிஸ்தான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பேருந்தில் அதன் சொந்தப் பயணிகள் மட்டுமல்லாமல், பழுதடைந்த மற்றொரு பேருந்தின் பயணிகளும் இருந்ததால், வாகனம் நெரிசலாக இருந்தது என்று செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பலுசிஸ்தான் முதலமைச்சர் சர்பராஸ் புக்தி உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மீட்புக் குழுவினர் பணியாற்றி வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே